IND vs ENG : விராட் கோலி இல்ல 3 ஆவது போட்டியில் நீக்கப்பட போற பிளேயர் இவர்தானாம் – தகவல் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வேளையில் இரண்டாவதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

IND vs ENG Jasprit Bumrah

- Advertisement -

இப்படி இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் துவங்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? விராட் கோலி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்த வேளையில் நிச்சயம் விராட் கோலி விளையாடுவார் என்பது கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியின் போதே உறுதி செய்து விட்டார். இதன் காரணமாக அவரை தவிர்த்து வேறு ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நிச்சயம் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

prasidh

அந்த வகையில் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளாக விளையாடி வந்த இளம் வேகம் பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளராக மட்டுமே இருந்து வரும் அவருக்கு இந்த ஓல்ட்டிராபோர்டு மைதானம் கை கொடுக்காது என்பது என்கிற காரணத்தினால் அவர் வெளியேற்றப்பட உள்ளார்.

- Advertisement -

ஸ்விங்க்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் அர்ஷ்தீப் சிங் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இந்த ஒரு மாற்றம் நிச்சயம் செய்யப்படும் என்று தெரிகிறது. மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 5 பவுலர்களின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) முகமது ஷமி, 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement