உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்திய அணியானது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகள் முதலிடத்தில் இருக்கும் வேளையில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.
விராட் கோலியின் தவறு :
இந்நிலையில் அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப இந்திய அணியானது அடுத்ததாக வரும் இரண்டு மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் வங்கதேச அணிக்கு எதிராகவும் அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ள இந்திய அணி அதன் பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர்களில் எல்லாம் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலி பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங்கில் உள்ள ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி கடந்த நான்கு ஆண்டுகளாகவே இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி வருகிறார். வங்கதேச அணியில் இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று கோலி திட்டம் தீட்ட வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் கோலிக்கு இது புரியும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு நேரத்தில் சவால்கள் வரும் அந்த வகையில் தற்போது விராட் கோலி இந்த சவாலை ஏற்றுக் கொண்டு மெருகேறுவார் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை சேப்பாக்கத்தில் பாக்கனுமா – டிக்கெட் விலை இதோ
இடதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது கடினம் தான் இருந்தாலும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர் அதனை சரியான முறையில் கையாண்டு பயிற்சி மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது. நிச்சயம் விராட் கோலி இதை நினைவில் கொள்வார் என்று நம்புவதாக ஓஜா கூறியது குறிப்பிடத்தக்கது.



