இது ஒன்னும் பாகிஸ்தான் இல்ல.. அந்த திட்டம் இல்லாம வந்தா இந்தியா சிதறடிக்கும்.. இங்கிலாந்தை எச்சரித்த ஓஜா

Praghyan Ojha
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவாக செயல்படக்கூடிய இந்தியாவை கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்திருந்தது. ஆனால் அதன் பின் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்டில் தொடரில் கூட இந்தியா தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

எனவே இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை இந்தியா நிரூபிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் இல்ல:
எனவே இம்முறை அதிரடியாக செயல்பட்டு இந்திய மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. அந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் மண்ணில் அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

அந்த வரிசையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவிலும் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருப்பதாக ஆண்டர்சன் கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணில் தார் ரோட் போல இருந்த பிட்ச்கள் இந்தியாவில் இருக்காது என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “புதிதாக தங்களை உட்படுத்திக் கொண்டுள்ள அதிரடி அணுகு முறையில் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அதற்கு தகுந்த பேக்-அப் திட்டத்தையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: உ.கோ ஜெயிக்காத சோக்கர்ன்னு சொல்லி அவரை ஸ்லெட்ஜ் பண்ணுங்க.. இங்கிலாந்துக்கு மான்டி பனேசர் ஐடியா

“ஏனெனில் பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகள் இங்கே இருக்காது. பாகிஸ்தானில் மைதானங்கள் சற்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இங்கே இருக்கும் சூழ்நிலைகள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்தியாவில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி இங்கிலாந்து தற்போது மனதளவில் பலமடைந்துள்ளது. ஆனால் அவர்களுடைய பஸ்பால் ஸ்டைலை இந்தியாவின் செயல்படுத்துவது கடினம். ஏனெனில் இந்திய ஸ்பின்னர்களை அவர்கள் எதிர்கொள்வது சுலபமாக இருக்காது. அல்லது பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் எளிதாக இருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement