KXIP vs RR : அறிமுக போட்டியிலேயே பட்லரை அட்டகாசமாக வெளியேற்றிய பஞ்சாப் வீரர்- வீடியோ

நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி துவக்க வீரரான பட்லர் 17 பந்து

pooran
- Advertisement -

நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி துவக்க வீரரான பட்லர் 17 பந்துகளில் 23 ரன்களை அடித்தார். அப்போது அவர் பஞ்சாப் அணியின் அறிமுக இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் ஓவரில் விக்கெட் கீப்பர் பூரானிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் 4 ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திரிபாதி 50 ரன்களும், பின்னி 11 பந்துகளில் 33 ரன்களையும் அடித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Advertisement