தவான் இதனை டெல்லி அணிக்காக செய்தே ஆக வேண்டும் – பாண்டிங் பேட்டி

Ponting
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

- Advertisement -

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் : டெல்லி அணி தற்போது அனைத்து அணிகளையும் வீழ்த்தும் பலத்துடனே உள்ளது. இருப்பினும் பண்ட் அதிக அளவில் பேட்டிங்கில் கைகொடுக்கிறார். ஆனால், அவரை மட்டும் பொருட்படுத்தாது ஷிகார் தவானும் அணிக்காக ரன்களை குவிக்கவேண்டும்.

Dhawan

தவானின் அதிரடி துவக்கம் இருந்தால் பின்வரிசை வீரர்கள் தைரியமாக ஆடி அணிக்கு பெரிய ரன் கணக்கினை அளிப்பார்கள். எனவே, தற்போது டெல்லி அணிக்கு தேவைப்படுவது அதிரடியான துவக்கமே என்று கூறினார் பாண்டிங். தவான் நேற்றைய போட்டியில் 47 பந்துகளை சந்தித்து 51 ரன்களை மட்டுமே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement