வெற்றிபெற்றாலும் சி.எஸ்.கே அணியின் வீரரை பாராட்டி பேசிய மும்பை கேப்டன் பொல்லார்ட் – விவரம் இதோ

pollard
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் : கேப்டனாக இது எனது தொடர்ச்சியான 15ஆவது வெற்றி. கேப்டன் பொறுப்பு என்பது சாதாரண பணியல்ல. நீங்கள் ஒரு நல்ல தலைவராக இருந்தால் மட்டுமே அதனைத் தொடர முடியும். அந்த வகையில் நான் ட்வென்டி போட்டிகளில் போதுமான அளவு விளையாடி உள்ளேன். இருப்பினும் கேப்டனாக அணிக்கு செயல்படும் போது உங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். அதன்படி இன்றைய போட்டியில் நான் என்னுடைய பணியை சரியாக செய்ததாக நினைக்கிறேன்.

- Advertisement -

முடிவுகளை சரியாக எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும். இந்த போட்டியில் 100 ரன்களுக்குள் சென்னை அணியை சுருட்ட வேண்டும் என நினைத்தோம். ஆனால் சாம் கரன் சிறப்பாக பேட்டிங் செய்து விட்டார். துவக்கத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை எடுத்தால் போட்டியில் நான் நன்றாக முன்னேறலாம். ஆனால் 4-5 விக்கெட்டுகளை எடுத்து அருமையாக இருந்தது.

ishan kishan 1

எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி போட்டியை முடித்துக் கொடுத்தனர். இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொடுத்தது மகிழ்ச்சி. மீதமுள்ள போட்டிகளில் நாங்கள் வெற்றிகரமாக தொடர உள்ளோம். கடந்த போட்டியில் சூப்பர் ஓவர்க்கு பிறகு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தற்போது வெற்றிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement