நேற்று இரவு மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ரெய்னா 16 ரன்கள் எடுத்திருந்தபோது பந்தினை தூக்கி அடித்தார். அந்த பந்தினை பவுண்டரி எல்லையில் இருந்த பொல்லார்ட் நம்ப முடியாத வகையில் பறந்து கேட்ச் செய்து அசத்தினார். இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :
M15: MI vs CSK – Suresh Raina Wicket https://t.co/IdMBhOlV2J via @ipl
— Siva.k (@sivakubendiran) April 4, 2019
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.
பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.