நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
அடுத்ததாக இந்திய அணி இன்று 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சங்கர் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : அன்புடைய கோலி மற்றும் ரவி – ப்ளீஸ் இன்றைய போட்டியில் விஜய் ஷங்கரை நீக்க வேண்டாம். ஏனெனில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வென்று கொடுப்பார்.
Dear Virat & Ravi – please don’t drop Vijay Shankar.
I think he’s coming into his own and would potentially win you tomorrow’s game.
Don’t think about Pant. He needs another 3 weeks prep before I think he can get into your World Cup side.Thanks, boys!
— Kevin Pietersen???? (@KP24) June 29, 2019
பண்ட் பற்றி நீங்கள் அதிகம் நினைக்கத் தேவையில்லை. அவர் உலகக் கோப்பையில் விளையாட தயாராக இன்னும் மூன்று வாரங்கள் ஆகும். எனவே ஷங்கரை அணியில் சேருங்கள் என்பது போன்று ட்வீட் செய்துள்ளார். ஷங்கருக்கு ஆதரவாக பீட்டர்சன் செய்த இந்த tweet அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய போட்டியில் சங்கர்தான் நான்காவது வீரராக களம் இறங்குவார் என்று ஏற்கனவே கோலி பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.