உமர் அக்மல் மீது 2 வழக்குகள் பதிவு: இந்த முறை எதற்காக தெரியுமா? – பாகிஸ்தான் அணியையே தடை செய்யனும்

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரராக இருந்தவர் உமர் அக்மல். இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். திறமை இருந்தாலும் அவ்வப்போது சில சர்ச்சைகளை ஏற்படுத்தி செய்திகளில் வந்து கொண்டிருப்பார். இந்நிலையில் தற்போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டம் முறையில் இவரது பெயர் அடிபட்டுள்ளது.

umar

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரை அணுகி உள்ளனர். ஆனால், இவரது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவில் கூறவில்லை. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

- Advertisement -

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எந்த ஒரு கிரிக்கெட் விளையாட முடியாதபடி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிக்காக விளையாட இவர் வாங்கியிருந்த தொகை திரும்பப் பெறப்பட்டது.

umar 2

இந்நிலையில் அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் அவர் தண்டனைக்குறியவர் என்று தீர்ப்பு வந்தால் ஆறு மாதம் முதல் ஆயுட்காலம் வரை தடைபெற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்தக் குற்றச்சாட்டிற்கு வரும் 31ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் பரிசோதனையின்போது கிரிக்கெட் அகடமியில் இருந்த பயிற்சியாளரிடம் தனது ஆடையை கழற்றி காட்டி ,எங்கு எனக்கு தொப்பை இருக்கிறது என்று கேட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் உமர் அக்மல். இது போன்று பல சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்துள்ளார் உமர் அக்மல்.

இதனால் மீண்டும் தற்போது சிக்கலான நிலையில் உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் பலர் இது போன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளதால் பாகிஸ்தான் அணியையே தடை செய்ய வேண்டும் என்றும் பலர் கமென்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement