கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதனை தொடர்ந்து இந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்களது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது. அந்த வகையிலேயே அந்த அணியின் வீரர்களின் தேர்வும் பலமாக அமைந்தது.
2025 ஐ.பி.எல் தொடரிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகினாரா? :
அதனால் இந்த 2025 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் இதுவரை சன் ரைசர்ஸ் அணி தாங்கள் விளையாடிய ஏழு போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது.
இதன் காரணமாக இந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு மிக கடினமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தற்போது அவரது மனைவியுடன் இந்தியாவிலிருந்து வெளியேறும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தை பேட் கம்மின்ஸ்சின் மனைவிதான் ஏர்போர்ட்டில் இருந்து பகிர்ந்திருக்கிறார் என்பதால் பேட் கம்மின்ஸ் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி விட்டாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கான உண்மை காரணம் யாதெனில் :
கடைசியாக நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சன் ரைசர்ஸ் அணியானது தங்களது அடுத்த போட்டியில் விளையாட ஒரு வாரம் இடைவெளி உள்ளது. அதனால் குறுகிய இந்த இடைவெளியில் ஒரு சிறிய சுற்றுலா செல்லவே அவர் தனது குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். ஆனாலும் ஒரு சில தினங்களில் அவர் மீண்டும் இந்த விடுமுறையை கழித்துவிட்டு இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : முதல் வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் டிம் டேவிட் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
ஏனெனில் தொடர்ச்சியான தோல்விகளால் அழுத்தத்தில் இருக்கும் அவர் சிறிய ஓய்வு தேவை என்பதற்காகவே தற்போது இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளார் என்றும் பின்னர் விரைவில் அவர் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



