Rishabh Pant : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாலும் இதனை செய்ய தவறிவிட்டேன் – பண்ட் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Pant
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பண்ட் கூறியதாவது : நீங்கள் நிலையாக களத்தில் நின்று விளையாடி கொண்டிருக்கும்போது போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும். ஆனால், இந்த போட்டியில் வெற்றியை பெற்றுத்தராமல் அவுட் ஆகிவிட்டேன். ஆனால், அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றியோடு முடிக்க முயற்சி செய்வேன்.

Pant-1

பயிற்சியில் பவுலர்களை எதிர்கொள்வதால் நான் விளையாடும்போது பவுலர்களை பார்ப்பதில்லை. பந்தினை மட்டுமே பார்க்கிறேன். பந்தை அடிக்கும்போதும் பலமாக அடிக்கவும் நான் முயற்சி செய்வதில்லை. பந்தை அடிக்கும் டைமிங் மட்டும் சரியாக கணித்து அடிப்பதால் என்னால் சிறப்பாக விளையாடமுடிகிறது என்று பண்ட் கூறினார்.

Advertisement