RR vs DC : இந்திய அணியின் தேர்வு குறித்த எண்ணம் இருந்தது. ஆனால், இதனை மட்டும் நினைத்து விளையாடினேன் – பண்ட் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Pant
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Pant

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரிஷப் பண்ட் கூறியதாவது : இந்த தருணத்தை நான் சிறப்பாக உணருகிறேன். முக்கியமான போட்டியில் நம்முடைய அணியை வெற்றிபெற வைப்பது நமக்கு எப்போதுமே மகிழ்ச்சியை தரும். பொய் சொல்ல விரும்பவில்லை இந்திய அணியின் தேர்வு குறித்த எண்ணம் என்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், தொடர்ச்சியாக எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன்.

Pant 1

எனது ஆட்டத்தின் மீதும், எனது திறமையின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் மைதானத்தின் தன்மையை கணித்து அதாற்கு ஏற்றாற்போல் எனது ஆட்டத்தை மாற்றி சிறப்பாக விளையாடினேன். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றது சிறப்பான ஒன்றாகும் என்று பண்ட் கூறினார்.

Advertisement