நேற்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஏழாவது முறையாக உலக கோப்பை தொடரில் வீழ்த்தி (7-0) என்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை உலகெங்கும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இந்த போட்டியை மைதானத்தில் நேரில் கண்டு களித்த தோனியின் மகள் ஜீவா தோனி மற்றும் மாற்று வீரராக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு தோனியின் மகளும், பண்டும் இணைந்து இந்திய அணியின் வெற்றியை சிறப்பான முறையில் கத்தியபடி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
The cutest video on the internet today !! Thank you @RishabPant777 for this one. #ZivaDhoni #IndvPak #Ziva pic.twitter.com/3yMWYmRx5a
— Prabhu (@Cricprabhu) June 16, 2019
உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.
அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.