சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இலங்கை அணியின் சண்டிமல் பந்தை சேதப்படுத்தினர் என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அஹ்மத் ஷேஷாத் தடை செய்யட்ட போதை மருந்து ஒன்றை பயன்படுத்தினார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
சமீபத்தில் 26 வயதாகும் பாகிஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேன் அஹ்மத் ஷேஷாத் மீது போதை பொருள் பயன்படுத்தியதற்காக விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு அவருக்கு இரண்டாவது முறையாக போதை பொருள் பயன்படுத்தியதை அறியும் சோதனை நடத்தப்படது.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. எனவே இந்த பிரச்சனை குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அஹ்மத் ஷேஷாத்திற்கு கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Independent Review Board Report on doping case has been received by PCB. Cricketer Ahmad Shahzad has tested positive for a banned substance. PCB will issue charge sheet today.
— PCB Official (@TheRealPCB) July 10, 2018
Please note that the report was received by PCB today.
— PCB Official (@TheRealPCB) July 10, 2018
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வு இணையதள பக்கத்தில் வெளியான செய்தியின்படி” அஹ்மத் ஷேஷாத்திற்கு வரும் ஜூலை 17ம் தேதி வரை வேறு மாதிரிகளை கொடுத்து பரிசோதிக்க கெடு விதித்தது. மேலும், ஜூலை 27ம் தேதி வரை இந்த முடிவுக்கு பதிலளிக்குமாறும் கெடு விதிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.