பாகிஸ்தான் இலங்கை போட்டியில் மைதானத்தை நெகிழவைத்த பாகிஸ்தான் கோலி ரசிகர் – என்ன செய்தார் தெரியுமா ?

Kohli-Fan
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் லாகூரில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் இலங்கை அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.

Pak

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவரின் செயல் மைதானத்தை கவர்ந்தது மட்டுமல்லாமல் தற்போது இணையத்திலும் கலக்கி வருகிறது. அது யாதெனில் நேற்றைய போட்டியை நேரில் காண வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கோலியின் ரசிகர் சப்னாஸ் ஷரீப் கையில் ஒரு பதாகையை ஏந்தி போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பதாகையில் விராட்கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். அதை நான் காண வேண்டும் என்று எழுதி மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். மேலும் அதனை அப்படியே ட்விட்டரில் பதிவிட்டவர் நான் உங்களின் தீவிர ரசிகன் நான் உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன். நீங்கள் பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

Kohli-fan-1

அந்த பதிவினை கண்ட ரசிகர்கள் பலரும் இந்திய அணி வீரர்களும் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். இவர்களைப்போலவே பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம் என்றும் சிலர் அவரது பதிவிற்கு பதில் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement