உலக விளையாட்டு வரலாற்றில் மாஸான ஒரு சாதனையை நிழத்தியுள்ள சென்னை மும்பை போட்டி – விவரம் இதோ

csk-vs-mi
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி கடந்த 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

Csk-vsMi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே வீரர்கள் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரின் முதல் வெற்றியை ருசித்தனர். இந்த போட்டியில் தோனி கடைசியாக களம் இறங்கி இரண்டு பந்துகளை சந்தித்து ரன் அடிக்கவில்லை என்றாலும் இரண்டு முக்கிய சாதனை படைத்துள்ளார். அதாவது இந்த போட்டியில் இரண்டு கேட்சிகளை பிடித்த தோனி ஐபிஎல் போட்டியில் 100 கேட்சிகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

faf

அதுமட்டுமின்றி நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக இருந்து தோனி தனது 100வது வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இதனால் தற்போது தோனியின் ரசிகர்கள் இரட்டிப்பு கொண்டாட்டத்தில் இந்த பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியான இரு தகவலின்படி டீவி மற்றும் ஆன்லைன் மூலம் இந்த சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியை 20 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் இந்த போட்டி உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement