பல வீரர்களுக்கு உடம்பு சரில்ல.. 13 பேர் தான் இருக்கோம்.. 3வது போட்டியில் 5 மாற்றங்கள் நிகழும் – ரோஹித் சர்மா கவலை பேட்டி

Rohit Sharma Press 2
- Advertisement -

ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்ற கையோடு ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் கேஎல் ராகுல் தலைமையில் விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளை கண்ட இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியது.

இதை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறும் 3வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் முதன்மையான இந்திய அணி களமிறங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே 3வது போட்டியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முதன்மையான வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்கு முன்பாக ஒன்று சேர்ந்து விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு ஒய்ட்வாஷ் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

ரோஹித் கவலை:
இந்நிலையில் இந்த போட்டிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். அதனால் தற்போது 13 வீரர்கள் மட்டுமே களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் 3வது போட்டியில் பாண்டியா, அக்சர் பட்டேல், சர்துள் தாக்கூர், கில், முகமது ஷமி ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று இப்போதே அறிவித்துள்ளார்.

இந்த நிலைமை தற்போது கவலையை கொடுத்தாலும் உலகக்கோப்பையில் அனைத்து வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்கு வழிவகை செய்யும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் 3வது போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியில் பல வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லை. அதே போல பல வீரர்களுக்கு சொந்த பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். அதில் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது”

- Advertisement -

“தற்போதைக்கு எங்களுடைய அணியில் 13 பேர் மட்டுமே இருக்கிறோம். குறிப்பாக கில் ஓய்வு பெற்றுள்ளார். ஷமி, பாண்டியா மற்றும் தாகூர் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக வீட்டுக்கு சென்றுள்ளதால் இந்த போட்டியில் இருக்க மாட்டார்கள். இந்திய அணியிலும் சில வைரலாக பரவி வருகிறது. எனவே இந்த நேரத்தில் அணியில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு எங்களால் உதவ முடியாது”

இதையும் படிங்க: ENG vs IRE : 31 ஓவர்களில் 280 ரன்கள்.. முரட்டு அடி அடித்த இங்கிலாந்து – அதிர்ஷ்டத்தால் தப்பிய அயர்லாந்து

“மேலும் அக்சர் படேல் காயம் பற்றி அடுத்த சில வாரங்களில் தெரிய வரும். ஒவ்வொரு வீரர்கள் மற்றும் அவர்களுடைய நலத்திற்கு கவனம் கொடுப்பது எங்களுடைய முக்கியமான வேலையாகும். எனவே தற்போது அவர்கள் வீட்டில் இருப்பது நல்லதாகும். ஏனெனில் அவர்கள் புத்துணர்ச்சியுடன் உலக கோப்பையில் கம்பேக் கொடுப்பதை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement