நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
அடுத்ததாக இந்திய அணி இன்று 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆடுவது நாம் அறிந்ததே. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இன்றைய போட்டியின் மொத்த வருமானம் குழந்தைகள் கல்வி செலவிற்காக யுனிசெப் நிறுவனத்தின் வழங்க போட்டி நிர்வாகம் முடிவெடுத்ததுள்ளது.
Look out @nassercricket & @Eoin16…
This weekend, the kids are taking over!#OneDay4Children pic.twitter.com/00V6QoACtV
— ICC (@ICC) June 24, 2019
மேலும் இன்றைய போட்டியில் சிறுவர்கள் வீரர்களை பேட்டி எடுப்பது, கமெண்ட்ரி செய்வது மற்றும் கேமராமேன்களுக்கு உதவுவது, மைதானத்தில் உள்ள அனைத்து வேலைகளும் பார்ப்பது என இன்றைய கிரிக்கெட் முழுவதும் குழந்தைகளை சார்ந்தே இருக்கும். அவர்களே அனைத்தையும் மேற் கொள்வார்கள் என்பதை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இன்றைய போட்டியின் மொத்த வருமானமும் யுனிசெப் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.