டிவில்லியர்ஸ்க்கு பிடித்த வீரர் கோலி அல்ல..! மற்றொரு இந்திய அதிரடி வீரர் ..! – யார் தெரியுமா..?

- Advertisement -

கிரிக்கெட் உலகில் மிஸ்டர்.360 என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தான் ஒய்வு பெறுவதாக நேற்று (மே 23) அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் சற்று சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.இந்நிலையில் அவர் சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யாரென்றும் எதனால் அவரை பிடிக்கும் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
De villiers

சமீபாத்தில் விக்ரம் சாத்தே என்பவர் தொகுப்பாளராக இருந்து வரும் “வாட் தி டக் ” என்ற வலைதள பேட்டி நிகழ்ச்சியில் தனது நண்பரான முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் ஜாண்டி ரோட்சுடன் காலாந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பல ரகசியங்களயும், சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட டிவில்லியர்ஸ், தான் எவ்வாறெல்லாம் கேப்டன் ஸ்மித்துடன் ரகளை செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தனது மனைவியிடன் தாஜ் மஹாலில் வைத்து தான் தனது காதலை சொன்னதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்ட கேள்விக்கு, ஐபிஎல் போட்டிகளில் தன்னுடன் விளையாடிவரும் விராட் கோலியின் பெயரை சொல்லாமல் முன்னாள் இந்திய வீரர் ஷேவாகின் பெயரை கூறி அனைவரயும் வியப்பில் ஆழ்த்தினார்.
sehwag

ஷேவாக் பற்றி டிவில்லியர்ஸ் கூறுகையில் “வீட்டின் அதிரடியான ஆட்டம் தனக்கு மிகவும் பிடிக்கும் ” தெரிவித்துள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஷேவாகின் புகைப்படம் ஒன்றை காண்பித்து “சேவாக் விளையாடும் போது கிரிஸில் நின்றுகொண்டிருக்கு போது பாடுவார் என்று ” கூறினார். அந்த புகைப்படத்தை பார்த்த டிவில்லியர்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்.

Advertisement