இன்றைய போட்டியில் காயம் காரணமாக விலகும் கொல்கத்தா வீரர் ! – தினேஷ் கார்த்திக்கு பின்னடைவா ?

rana
- Advertisement -

கொல்கத்தா அணியின் ஆள் ரவுண்டு பிளேயராணா “நிதிஷ் ராணா” இன்று நடக்க உள்ள போட்டியில் பங்கு பெற மாட்டார் என்று அறிவிக்கபட்டுள்ளது. இதனால் ஒரு சிறந்த வீரரை இழந்து இன்று நடக்க உள்ள தனது முக்கியமான போட்டியில் நெருக்கடியை சந்தித்துள்ளது கொல்கத்தா அணி.

Nitish-Rana

- Advertisement -

இளம் வீரர் நிதீஷ் ராணா இவர் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், சிறந்த சூழல் பந்து வீச்சலாகவும் இருந்து வந்தார். மேலும் இது வரை கொல்கத்தா அணி விளையாடிய 8 போட்டிகளிலும் பங்கு பெற்ற இவர் இதுவரை 188 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் 19 பந்துகளை மட்டுமே வீசியுள்ள இவர் இதுவரை 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த போட்டியின் போது கொல்கத்தா அணி இரண்டாவதாக களமிறங்கியது. அந்த போட்டியில் நிதிஸ் ராணா 10 பந்துகளில் 15 ரன்களை குவித்த போது பின் முதுகில் ஏற்பட்ட வலியால் அந்த போட்டியில் இருந்து விலகினார்.

NitishRana

பின்னர் இன்று வரை இவருக்கு அந்த காயம் சரியாகாமல் இருப்பதால் இன்று நடக்க விற்கும் இந்த போட்டியில் அவர் பங்கு பெற மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.இதுபற்றி அந்த அணி நிர்வாக தெரிவிக்கையில் “அவருக்கு இன்னும் பின் முதுகில் வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். எனவே அவரது காயம் குறித்து நாளை தான் தெரியவரும்”என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement