நிதிஷ் ராணாவுக்கு ஏற்பட்ட சிக்கல். இந்த வருட ஐ.பி.எல் விளையாட முடியாமல் கூட போகலாம் – விவரம் இதோ

Rana
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் 2015-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமான நிதிஷ் ராணா அதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வரும் நித்திஷ் ராணா இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட முடியாதநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

Nitish-Rana

- Advertisement -

அதன் காரணம் யாதெனில் வயது மோசடி காரணமாக டெல்லி அணி நிர்வாகத்தால் 2015 ஆம் ஆண்டு விளையாட தடை செய்யப்பட்ட 22 வீரர்களில் நித்திஷ் ராணாவும் ஒருவர். இந்நிலையில் தற்போது மண்ஜோட் கல்ரா என்ற வீரர் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நித்திஷ் ராணாவின் வயது மோசடி விவகாரத்தை தற்போது அம்மாநில கிரிக்கெட் நிர்வாகம் தூசி தட்டி எடுத்து உள்ளது. எனவே அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவது கடினம் என்றும் மேலும் சில ஆண்டுகள் வரை ஒரு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

NitishRana

இந்திய அணி இளம் வீரர்கள் விரைவாக முதல் தரப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசையால் பல வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் தங்களது வயதை குறைவாகக் கூறி அணிகளில் பங்கேற்பது தற்போது பிரச்சினையாக வலுத்து வருகிறது. மேலும் அண்டர் 19, அண்டர் 16 என அணியில் இணைய வீரர்கள் வயது மோசடியில் ஈடுபடுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisement