IND vs WI : எனக்கு இப்படி காயம் ஆனதுக்கு அவங்க 2 பேர் தான் காரணம் – நிக்கோலஸ் பூரான் வெளியிட்ட தகவல்

Pooran
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்று இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையில் இருந்த வேளையில் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

அதன்படி புளோரிடோ நகரில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதன் பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அசத்தலான முறையில் வெற்றி பெற்றதோடு 17 ஆண்டுகள் கழித்து இந்த டி20 தொடரை (3-2) மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது அனைவரது மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த நிக்கலஸ் பூரான் கடைசி போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன்படி இந்த கடைசி டி20 போட்டியில் 35 பந்துகளை சந்தித்து 47 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டும் இன்றி இந்து தொடரில் 5 போட்டிகளில் 176 ரன்கள் குவித்த பூரான் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து பூரான் வயிற்றில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அந்த ஒரு ஷாட்டை 800 டைம்ஸ் பிராக்டீஸ் பண்ண அவர் சூப்பர்ஸ்டாரா வருவாரு பாருங்க – இளம் வீரரை பாராட்டிய ஆகாஷ் சோப்ரா

அதேபோன்று ப்ரெண்டன் கிங் அடித்த ஒரு பந்தும் அவரது கையில் அடித்து அங்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்ட பூரான் “தி ஆப்டர் எஃபெக்ட்ஸ்”, “தேங்க் யூ அர்ஷ்தீப் சிங் அன்ட் ப்ரெண்டன் கிங் என அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement