சீன ஆப்புகளுக்கு ஆப்பு வைத்த நீங்கள் ஐ.பி.எல் தொடரில் மட்டும் ஏன் வச்சிருக்கீங்க அதையும் தூக்குங்க – பஞ்சாப் ஓனர் அதிரடி

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது பதிமூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்சமயம் இத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

IPL-1

- Advertisement -

ஆனால் ஐபிஎல் விரைவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நெஸ் வாடியா இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விவோ ஸ்பான்சர் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். லடாக் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிர் உயிர் இழந்ததால் இந்தியா முழுவதும் சீனாவை எதிர்த்து பெரிய எதிர்ப்பலை எழுந்தது.

அதுமட்டுமின்றி இந்திய அரசாங்கம் சீனா மிதமான கோபத்தை வெளிப்படுத்த சீன பொருட்களை புறக்கணிக்குமாறு குரல் எழுப்பி உள்ளது. மேலும் சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் 59 ஆப்புகளை இந்தியாவில் தடை செய்யவும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Nesswadia

இந்நிலையில் தற்போது விவோ ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்த ஐபிஎல் ஸ்பான்சர் ஆன விவோ சீன நிறுவனம் என்பதால் இந்த ஸ்பான்சரை ரத்து செய்யுமாறு பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் சீன நிறுவனம் தரும் இந்த ஸ்பான்சர் பணத்தை இழக்க முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து நெஸ் வாடியா பேசுகையில் : ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்ஷிப் அகற்றவேண்டும். நாட்டுக்காக இதை நாம் செய்தாக வேண்டும். நாடு தான் முதல் அதன் பின்னர்தான் பணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது சீன ப்ரீமியர் கிடையாது இந்தியாவின் ப்ரீமியர் லீக் எனவே இந்த ஸ்பான்சரை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

kxip

புதிய ஸ்பான்சர்கள் கிடைப்பது கடினம் என்றாலும் இந்திய ஸ்பான்சர்கள் இருக்கின்றனர். அவர்கள் கண்டிப்பாக இதற்கு முன் வருவார்கள் என்றும் நான் பிசிசிஐ தலைவராக இருந்திருந்தால் இந்திய ஸ்பான்சர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இவரின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்தாலே தெரியும்.

Advertisement