இப்போதைக்கு என்னோட போகஸ் எல்லாம் இதில் மட்டும் தான் – தமிழக வீரர் நட்டு நம்பிக்கை

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வான நடராஜன் அங்கு சென்ற பின்னர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட்களிலும் அறிமுகமாகி அசத்தினார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் இடம்பிடித்த அவர் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே விலகினார்.

nattu

பின்னர் காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நடராஜன் அதன்பிறகு தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது காயம் முழுவதும் குணமடைந்த நிலையில் மெல்ல மெல்ல தனது பயிற்சிகளை துவங்கி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடராஜன் கூறுகையில் : அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் தற்போது பூரண குணமடைந்து இருக்கிறேன். என்னுடைய பயிற்சியை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளேன். தற்போது வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். இப்போதைக்கு என்னுடைய நோக்கம் அனைத்தும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் மட்டுமே உள்ளது.

ஐபிஎல் தொடருக்கு முன்னர் நான் முழுவதுமாக தயாராகி விடுவேன் என்று நடராஜன் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

nattu 1

ஆனால் ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதைக்கு என்னுடைய இலக்கு எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அதன் பின்னர் நான் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார் நடராஜன்.

Advertisement