சன் ரைசர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி – அவரோடு சேர்ந்த 6 பேர் தனிமை

Nattu 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று நாள் ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் தற்போது இன்று செப்டம்பர் 22ஆம் தேதி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

williamson

- Advertisement -

இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று காலை எடுக்கப்பட்ட பரிசோதனையின் படி அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் தற்போது சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அது மட்டுமின்றி அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 6 பேரை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தனிமை படுத்தியுள்ளது. அதன்படி சக வீரரான விஜய் சங்கர் மற்றும் அணியின் மேனேஜர் விஜயகுமார், பிசியோதெரபி ஷாம் சுந்தர், டாக்டர் அஞ்சனா வண்ணன், லாஜிஸ்டிக் மேனேஜர் துஷார், நெட் பவுலர் பெரியசாமி கணேசன் ஆகியோர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

Shankar

இதன் காரணமாக இன்றைய போட்டியில் நடராஜன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் இன்றைய போட்டி கட்டாயம் நடைபெறும்.

அதேவேளையில் வில்லியம்சன் தலைமையிலான இந்த போட்டியில் நடராஜன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement