இந்திய அணியில் அவர் இல்லாதது தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு – நாசர் ஹுசேன் கருத்து

Nasser-Hussain
- Advertisement -

இந்திய அணி கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றாமல் இருப்பது இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வகையான ஐசிசி கோப்பையும் வென்ற பின்னர் அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் பல்வேறு கோப்பைகளை இந்திய அணி தவற விட்டது.

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை முன்னேறியும் அந்த இரண்டு வாய்ப்புகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாக இந்திய அணி திகழ்ந்தும் கோப்பையை தவறவிட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என நாசர் உசேன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் ரிக்கி பாண்டிங்குடன் ஆசஷ் தொடரின் போது நிறையவே நேரத்தை செலவிட்டேன். அப்போது நானும் இங்கு போன்றும் நிறைய பேசிக்கொண்டோம். அந்த சமயத்தில் ஒருமுறை ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்க்கு தனது மொபைல் போன் மூலம் மெசேஜ் அனுப்பி எங்கே இருக்கிறாய்? என சில விடயங்களை கேட்டறிந்தார்.

அப்போது ரிஷப் பண்ட்டும் தான் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளதாகவும், காயத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்திய அணியை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் இடம் பூர்த்தி செய்யப்பட முடியாத ஒன்று. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் வெளிநாட்டு மண்ணில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்புதான். அதேபோன்று இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும், ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஷ், கேமரூன் க்ரீன் இருப்பது போன்று இந்தியாவிற்கு ஹார்டிக் பாண்டியாவால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும்.

இதையும் படிங்க : அஸ்வின், ஜடேஜா இருந்தும் அவர மாதிரி பிளேயர் இல்லாததே வெளிநாட்டில் இந்தியா தடுமாற காரணம் – நாசர் ஹுசைன் பேட்டி

அவர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தலாம் என்றும் நாசர் ஹுசேன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ரிஷப் பண்ட் அதன்பிறகு நாடு திரும்பிய வேளையில் புத்தாண்டு பிறக்கும் போது கார் விபத்தில் சிக்கி காயமடைந்து கடந்த எட்டு மாதங்களாக ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement