அதுக்காக காத்திருக்கேன்.. அவர் மட்டும் வந்துட்டா இரக்கமற்ற அணியா மாறிடுவாங்க.. நாசர் ஹுசைன்

Nasser Hussain
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்றது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்த்தி விட முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது.

குறிப்பாக இரண்டாவது போட்டியில் விராட் கோலி, ராகுல், ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் விலகிய விராட் கோலி 3வது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வருவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

இரக்கமற்ற வீரர்:
இந்நிலையில் 3வது போட்டியில் விராட் கோலி வந்தால் இந்திய அணி இரக்கமற்றதாக மாறி மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று இங்கிலாந்து அணியை முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் மகத்தான பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் மீண்டும் மோதுவதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெயிலி மெயில் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“அவர் மீண்டும் விளையாட வருவார் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் மோதுவது மட்டுமே தவறியுள்ளது. அதற்காக நான் காத்திருக்கிறேன். இதுவரை பேட்டிங் செய்த 4 இன்னிங்ஸில் இந்தியா 3இல் சொதப்பலாக செயல்பட்டது. அதில் சுமாராக அவுட்டானதற்காக ராகுல் டிராவிட் தங்களுடைய வீரர்களை திருத்துவார் என்பதை நான் அறிவேன்”

- Advertisement -

“தற்சமயத்தில் இங்கே இங்கிலாந்து அணி மூச்சு விடுவதற்கு வழியை கொடுக்கும் நாம் இனிமேல் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி நினைக்கும். மேலும் விராட் கோலி போன்ற முற்றிலும் இரக்கமற்றவர் வரும் போது அது அதிகமாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள காரணத்தாலேயே விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நான் ஏன் கொடுக்கனும்.. கேன் வில்லியம்சன் பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திராவின் பதிலால்.. ரசிகர்கள் அதிருப்தி

இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த பின் இந்தியாவில் இருந்தே வெளியேறியுள்ள இங்கிலாந்து அணியினர் அபுதாபியில் ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மறுபுறம் சில நாள் இடைவெளிக்குப் பின் ராஜ்கோட் நகருக்கு செல்லும் இந்திய அணியினர் அங்கு வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதன் பின் இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement