CSK vs MI : முரளி விஜய் இந்த போட்டியில் ஆடினால் அணிக்கு பலம். தல தோனி முடிவு என்ன ஆகுமோ ? – விவரம் இதோ

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள

Vijay
- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Dhoni

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முரளி விஜய் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஒருவரை மட்டும் வீசிய தாகூர் அந்தப் அந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் மீண்டும் பந்துவீச தோனி அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த போட்டியில் ஜடேஜா, ஹர்பஜன் மற்றும் தாஹிர் ஆகியோரை வைத்து சிறப்பாக பந்து வீசி முடித்து வைத்தார் தோனி இதனால் தாகூர் அந்த ஒரே ஒரு நிறுத்தப்பட்டார்.

ஆகையால், இன்றைய போட்டியில் ஆறாவது பந்து வீச்சாளராக தாகூரை தேர்வு செய்வதற்கு பதிலாக முரளி விஜய்யை அணியில் தேர்வு செய்தால் அது சென்னை அணியின் பேட்டிங்கில் மிகவும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள முரளி விஜய் அந்த இரண்டு போட்டியிலும் ஓரளவு சிறப்பாக ஆடி உள்ளார் என்று கூற வேண்டும். பேட்டிங்கில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு முரளி விஜய் சேர்க்கப்பட்டால் அது அணிக்கு பலம் என்றே கூறவேண்டும். எனவே தோனி என்று எடுக்கப்போகும் முடிவு ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.

Advertisement