CSK vs DC : முரளி விஜய் ஓப்பனிங் ஆடினால் சென்னை வெற்றி பெறுமா ? – விவரம் இதோ

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ்

Vijay
- Advertisement -

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.

Ishanth

- Advertisement -

எப்படியும் இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக ஒரு விடயத்தை சென்னை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி இன்றைய போட்டியில் முரளி விஜய் ஓப்பனிங் ஆடினால் சென்னை வெற்றி பெருமாம். இதோ அதை பற்றிய முழு தகவல் உங்களுக்காக :

இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு இதே போன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே குவாலிபயர் 2 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை அடித்தது. அப்போது சென்னை அணியின் துவக்க வீரரான முரளி விஜய் அபாரமாக ஆடி 58 பந்தில் 113 ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதனால், அதேபோன்று இன்று நடக்கவிருக்கும் குவாலிபயர் 2 போட்டியில் சென்னை அணியின் முரளி விஜய் துவக்க வீரராக விளையாடினால் சென்னை அணி வெற்றி பெரும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், தொடர்ந்து சொதப்பிவரும் வாட்சனுக்கு பதிலாக இன்றைய போட்டியில் முரளி விஜய் ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement