இர்பான் பதானை தொடர்ந்து லங்கா ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ

LPL
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் வங்கதேசப் பிரீமியர் லீக் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

lpl 1

- Advertisement -

ஐபிஎல் தொடர் துவங்கிய காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் என்ற ஒரு டி20 லீக் தொடங்கப்பட்டது. ஆனால் போதிய ஸ்பான்சர்கள் மற்றும் நிதி இன்றி அந்த தொடர் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அதனை சரிசெய்ய முடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக் தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தொடர் வருகிற 26-ஆம் தேதி துவங்குகிறது மொத்தம் ஐந்து அணிகள் மட்டுமே விளையாடுகின்றன. கொழும்பு, தம்புளா, கல்லி, ஜப்னா, கண்டி ஆகிய ஐந்து நகரங்களை மையமாக வைத்து இந்த அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

munaf

இதில் இந்திய வீரர்கள் சிலரும் விளையாட போகிறார்கள் ஓய்வுபெற்ற இந்திய வீரரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் கண்டி அணிக்காக விளையாட போகிறார். இந்திய அணிக்காக இவர் 13 டெஸ்ட் போட்டிகளிலும் 70 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

Munaf 1

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கண்டி அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது இரண்டாவதாக முனாப் படேல் இந்த தொடருக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement