மும்பை அணியில் பார்முக்கு திரும்பிய நட்சித்திர வீரர். இனி அவங்கள தொட கூட முடியாது – விவரம் இதோ

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

- Advertisement -

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

buttler

இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் சிறப்பாக பந்துவீசி மீண்டும் பார்மிற்க்கு திரும்பியுள்ளார். இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே சற்று சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த பும்ரா நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரின் பந்துவீச்சில் மீண்டும் பழைய படி வேகமும், துல்லியமும் அற்புதமாக இருந்தது.

Bumrah

முதல் நான்கு போட்டிகளில் டிரென்ட் போல்ட் மற்றும் பேட்டின்சன் கலக்கி வர தற்போது மீண்டும் நம்பர் 1 பவுலராக அவர்களுடன் சேர்ந்து பும்ராவும் சிறப்பாக பந்து வீசி வருவதால் இனி பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் வலுவாக பார்க்கப்படும். அனைத்து அணிகளும் அடிக்கடி வீரர்களை மாற்றி வரும் நிலையில் மும்பை அணி மட்டும் மாற்றாமல் இருக்கும் வீரர்களையே வலுப்படுத்தி வருவதால் அந்த அணியை வீழ்த்த இனி மற்ற அணிகள் கஷ்டப்படும் என்பது உறுதி.

Advertisement