மும்பை கைப்பற்றிய இந்த ஐ.பி.எல் கோப்பையில் இப்படி ஒரு விசித்திரமான சாதனையா – வியக்கவைக்கும் தகவல்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வித்தியாசமான சாதனையை ஐ.பி.எல் வரலாற்றில் படைத்துள்ளது. அந்த வகையில் ஒரு தொடரில் வீரர்களை மாற்றாமல் குறைந்த வீரர்களை வைத்து கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் 11 பேரை தவிர மாற்று வீரராக 4 பேரை மட்டுமே மும்பை அணி பயன்படுத்தியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் போது அவருக்கு பதிலாக சவுரவ் திவாரியும், பும்ரா ஓய்வெடுக்கும் போது அவருக்கு பதிலாக குல்கர்னியும், ராகுல் சாகர் ஓய்வெடுக்கும் போது அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், பேட்டின்சன் ஓய்வு எடுக்கும்போது குல்டர் நைல் ஆகியோர் மட்டுமே மும்பை அணிக்காக மாற்று வீரராக களமிறங்கினார்.

mi

ஆகமொத்தம் ஆடும் லெவன் மற்றும் மீதமுள்ள நான்கு பேர் என 15 பேரை மட்டுமே இந்த தொடரில் மும்பை அணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். எனவே 15 பேரைக் கொண்டு குறைந்த வீரர்களை கொண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணியாக மும்பை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement