ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மைதானத்தில் பயிற்சியை துவங்கிய மும்பை வீரர்கள் – யார் யார் தெரியுமா ?

- Advertisement -

இந்த வருடம் ஐபிஎல் தொடர் பற்றி தற்போது வரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்தியும் வரவில்லை கடைசியாக வந்த செய்தி என்னவெனில் ஐபிஎல் தொடர் இந்த வருடம் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தான். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியை துவக்கி விட்டதாக செய்திகள் வந்துள்ளது.

MI

- Advertisement -

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, அரசின் அறிவித்தலும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பயிற்சி கேம்பை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக வெளிப்புற மைதானத்தில் தனிநபர்கள் பயிற்சியை செய்யவே மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. கொரோனா அதிகமாக பரவி வருவதால் வீரர்கள் பயிற்சி எடுக்கவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை நகரத்திற்கு வெளியே உள்ள காலி மைதானத்தில் தனது முன்னணி வீரர்களை வைத்து பயிற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆதித்ய தாரே, தவால் குல்கர்னி போன்றோர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்யும் விதமாக ரோகித்சர்மா ஹர்திக், பாண்டியா சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. கொரோனா வைரஸ் வந்தவுடன் இந்த வீரர்கள் அனைவரும் பெரும்பாலும் அதிக நேரம் சமூக வலைத்தளத்தில் நேரத்தை போக்கினர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இவர்களை காணவில்லை.

ஒருவேளை கண்டிப்பாக இந்த பயிற்சியில் கலந்து கொள்ளத்தான் சென்றிருப்பார்கள் என்று அனுமானம் தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் சௌரவ் கங்குலி இந்த வருடம் ஐபிஎல் தொடர் எப்படியாவது நடத்தப்படும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Advertisement