தோனி என்னோட தோளின் மீது கைபோட்டு எனக்கு கொடுத்த அறிவுரை இதுதான் – இந்திய அணிக்கு தேர்வான முகேஷ் குமார் நெகிழ்ச்சி

Mukesh-Kumar
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.

Mukesh Kumar 1

- Advertisement -

அதில் பெங்காலை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக சில தொடர்களில் அவர் இடம்பெற்றிருந்தாலும் இன்னும் விளையாடும் பிளேயிங் லெவனில் அறிமுக வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜூலை 12-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் இடம்பெறாததால் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு புறப்படும் முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் தோனி ஐபிஎல் தொடரின் போது என்னென்ன அறிவுறைகளை வழங்கினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே தோனி பாயை பார்க்கும்போது கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை தான் அவரிடம் கேட்டேன். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது அவரை சந்திப்பு பேச வாய்ப்பு கிடைத்தது.

Mukesh Kumar

அந்த வகையில் நான் தோனியிடம் நீங்கள் ஒரு கேப்டனாகவும், ஒரு விக்கெட் கீப்பராகவும் பந்துவீச்சாளர்களுக்கு என்னென்ன அறிவுறைகளை வழங்குவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் : என் தோள் மீது கையை போட்டு நான் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் தான் கொடுப்பேன். அதாவது நீங்கள் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை மைதானத்தில் செயல்படுத்தி பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் நீங்கள் உங்களது திறனை மைதானத்தில் பரிசோதித்தால் தான் நீங்கள் அதிலிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். எனவே உங்களுடைய திறன் என்ன என்று புரிந்து கொண்டு அதற்கேற்ற அனைத்து திட்டங்களையும் களத்தில் செயல்படுத்தி பாருங்கள். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பந்துவீச்சை நீங்கள் வெளிப்படுத்தினால் தான் முன்னேற்றத்தை காண முடியும்.

இதையும் படிங்க : ஆஷஸ் தொடரிலிருந்து வெளியேறிய நாதன் லயன். வரலாற்று சாதனையை நிகழ்த்திய அவருக்கு – ஏற்பட்ட பரிதாப நிலை

அது மட்டுமே நான் பவுலர்களிடம் சொல்லுவேன் என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அவர் கொடுத்த அறிவுரை எனக்கு ஐபிஎல் தொடரின் போது மிகச் சிறப்பாக உதவியது. அதோடு இந்திய அணிக்காகவும் அவர் கொடுத்த சில டிப்ஸ்களை பயன்படுத்தி நான் சிறப்பாக பந்துவீசுவேன் என முகேஷ் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement