5 பவுலர்களுடன் ஆடினால் இவரை 5 ஆவது பவுலராக சேருங்க. நல்லா பேட்டிங் பண்ணுவாரு – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே கடந்த பல நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் யார்? யார்? இடம்பிடிக்கப்போகிறார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த அளவிற்கு தற்போது இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரென்த் வலுவாக உள்ளது.

IND

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் அணியின் தேர்வு எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பந்துவீச்சாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் யாரை சேர்க்கலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷாந்த் சர்மாவிற்கு தற்போது காயம் அதிகமாக அவரை வாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி அவரது பார்மும் முன்பு போன்று சிறப்பானதாக இல்லை.

Siraj

எனவே அவருக்கு பதிலாக சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்டு வரும் சிராஜ்-க்கு வாய்ப்பினை வழங்கலாம். அதேபோன்று பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் நிச்சயம் தேர்வாகி விடுவார்கள். மேலும் தென்னாபிரிக்க மண்ணில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அஷ்வின் மட்டும் போதுமானவர். இதனால் இந்த 4 பந்துவீச்சாளர்களின் இடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே வாய்ப்பு. கடும் அழுத்தத்தை சந்தித்துள்ள 2 சீனியர் வீரர்கள் – விவரம் இதோ

ஒருவேளை இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் முதல் போட்டியை அணுகினால் ஷர்துல் தாகூரை விளையாட வைப்பது தான் என்னுடைய முதல் தேர்வு. ஏனெனில் ஏழாவது இடத்தில் இறங்கி அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும். அதோடு அஷ்வினும் பின்வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதனால் பேட்டிங் பலமும் சற்று அதிகரிக்கும். எனவே நிச்சயம் ஐந்தாவது பவுலராக ஷர்துல் தாகூரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement