விராட் கோலி உ.கோ ஜெயிக்க கூடாதுன்னு தோனி வேணும்னே அப்டி பண்ணாரு – யோக்ராஜ் சிங் பரபரப்பு புகார்

- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான கேப்டனாகவும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2011 உலகக் கோப்பைக்கு பின் சேவாக், கம்பீர் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தற்போதைய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வளர்த்த அவர் எதிர்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவர். மேலும் 2017 சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு ஜனவரியிலேயே வெள்ளைப்பந்து கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார்.

இருப்பினும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பும்ரா வீசிய நோ-பால் காரணமாக பக்கார் ஜமான் சதமடித்ததும் முகமது அமீர் வேகத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான் ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதும் இந்தியாவுக்கு தலை குனியும் தோல்வியை பரிசளித்தது. அதை விட 2019 உலகக் கோப்பையிலும் விராட் கோலி தலைமையில் மிகவும் வலுவான அணியாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்த உலக சாதனை உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு சென்றது.

- Advertisement -

பரபரப்பு குற்றசாட்டு:
அந்த நிலையில் மான்செஸ்டர்ரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை 239 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை வந்தது. அதனால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் ஸ்விங் செய்து மிரட்டலாக பந்து வீசிய நியூசிலாந்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராகுல் 1, ரோஹித் 1, விராட் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது இந்தியாவின் வெற்றியை ஆரம்பத்திலேயே பறித்தது.

போதாக்குறைக்கு தினேஷ் கார்த்திக் 6, பண்ட் 32, பாண்டியா 32 என முக்கிய வீரர்களுடன் சொற்ப ரன்களில் அவுட்டானதால் சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் நங்கூரமாக நின்று காப்பாற்ற போராடினர். இருப்பினும் அதில் ஒரு கட்டத்திற்கு பின் செட்டிலான தோனி மெதுவாக விளையாடியதால் அழுத்தத்திற்கு உள்ளான ஜடேஜா அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு 77 (59) ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து அதிரடியை துவக்கிய தோனி கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்தாலும் டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்த போது மார்ட்டின் கப்டில் 50 (72) ரன்களில் ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

அதனால் பல கோடி ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்தது போலவே இறுதியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றதால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கண்ணீர் விடாத குறையாக சோகத்தை வெளிப்படுத்தினர். மேலும் அந்த போட்டியே தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது அவருடைய ரசிகர்களுக்கு இப்போதும் சோகமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி உலகக் கோப்பையை வென்று விடக்கூடாது என்பதற்காக தோனி வேண்டுமென்றே மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததாக யுவராஜ் சிங் தந்தை மற்றும் முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

குறிப்பாக உலகக்கோப்பை வென்ற கேப்டனாக தாம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தோனி அவ்வாறு செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியது பின்வருமாறு. “அதை நினைத்தால் எப்போதும் என்னுடைய ரத்தம் கொதிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்பதற்காக தோனி வேண்டுமென்றே சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில் தம்மை தவிர்த்து அவர் இந்தியாவுக்காக வேறு எந்த கேப்டனும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைப்பதை விரும்பவில்லை”

இதையும் படிங்க:IND vs WI : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்த்து மற்றொரு 24 வயது இந்திய வீரரும் இன்று அறிமுகமாக வாய்ப்பு – விவரம் இதோ

“அதனாலேயே ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா கடுமையாக இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த போதிலும் தோனி தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் விளையாடவில்லை. சொல்லப்போனால் அவர் தன்னுடைய தரத்திற்கு 40% மட்டுமே விளையாடாமல் முழுமையாக விளையாடியிருந்தால் 48வது ஓவரிலேயே இந்தியா வென்றிருக்கும்” என்று கூறினார்.

Advertisement