இப்போதான் ரிலாக்ஸ்ஸா இருக்கு. எதைப்பத்தியும் கவலைப்பட வேணாம் – தோனி இப்படி கூற காரணம் என்ன தெரியுமா ?

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

kohli

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : திருப்தியான போட்டிகளில் இதுவும் ஒன்று. அனைத்தும் திட்டமிட்டபடி சென்றது பெங்களூரு அணி வீரர்களின் விக்கெட்களை சீரான இடைவெளியில் எடுத்து வந்ததால் அவர்களை எளிதான ரன்களில் சுருட்ட முடிந்தது. இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் மிடில் அவர்களின் சரியான நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைத்தது.

csk

இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். மிகப்பெரிய ஷாட்டுகளை மிகவும் எளிமையாக ஆடினார். இறுதியில் வெற்றி கிடைத்ததால் தற்போது சிறிது ரிலாக்ஸ் கொஞ்சம் நம்பிக்கையும் பிறந்துள்ளது. இனிவரும் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிகளை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாட வேண்டும் முடிவுகளைப் பற்றி கவலைப்பட கூடாது என்று டோனி கூறினார்.

Advertisement