MS Dhoni : இவர்களாலே சென்னை அணி இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை வந்துள்ளது – தோனி பெருமிதம்

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Dhoni

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணி இதுவரை முன்னேறியதற்கான காரணத்தை தோனி தற்போது வெளியிட்டுள்ளார். அதுகுறித்து தோனி கூறியதாவது :

இந்தத் தொடரில் முதல் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி போட்டியில் விளையாட இருக்கும் இன்றுவரை ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். அதிலும் ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோர் 35 வயதை கடந்தவர்கள். அவரகள் 40 முதல் 45 நாட்கள் வரை உடல் தகுதியுடன் சிறப்பாக பந்து வீசி வருவது சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Tahir-2

மேலும், ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த ஸ்பின் கூட்டணியே சென்னை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு காரணமாக நான் நினைக்கிறேன். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் பேட்டிங்கில் சென்னை அணி பதற்றமின்றி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியிலும் எங்களது அணி சிறப்பாக பந்துவீசி மும்பை அணி கட்டுப்படுத்தி வெற்றியை கைப்பற்றும் என்று நம்புகிறேன். என்று தோனி கூறினார்.

Advertisement