டெல்லி அணிக்கு எதிரான எங்களின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – தோனி வெளிப்படை

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு வீரர்களை 7 ரன்களில் இருந்த சென்னை அணி மொயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அது ஆட்டத்தால் மீண்டும் சிறப்பான பாதைக்குத் திரும்பியது.

raina

- Advertisement -

பின்னர் ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என அனைவரும் கைகொடுக்க 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் என்ற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், மொயின் அலி 36 ரன்களும் குவித்தனர். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது குறிப்பாக துவக்க வீரர்கள் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

dhawan

இந்த போட்டியில் பனிப்பொழிவு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதன்படி பேட்டிங்கில் முடிந்தளவு நாங்கள் அதிகமான ரன்களை அடிக்க ஆசைப்பட்டோம். அதைப்போன்றே எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடி 188 ரன்களை குவித்தனர். ஆனால் எங்களது வீரர்களால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை இனிவரும் போட்டிகளில் பவுலர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.

dc

இந்த போட்டியில் இன்னும் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் நாங்கள் சாதகமான நிலையில் இருத்திருப்போம். இதுபோன்ற மைதானங்களில் 200 ரன்கள் இலக்கு என்பதுதான் சரியானதாக இருக்கும். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் எங்களது தோல்விக்கு காரணம் முழுமையாக பந்துவீச்சையே சேரும் என தோனி குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement