MS Dhoni : 1 ரன்னில் தோற்றது கூட கஷ்டமாக இல்லை. மிடில் ஓவர்களில் நாங்கள் இதை செய்திருக்க வேண்டும் – தோனி வேதனை

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Parthiv

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது : இது ஒரு சிறந்த போட்டியாகும். நாங்கள் அவர்களை குறைந்த ரன்களிலேயே சுருட்டினோம். ஆனால், எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. துவக்கத்தில் அடுத்தது விக்கெட்டை இழந்ததால் பின்வரிசையில் ரிஸ்க் எடுக்க சற்று யோசிக்கவேண்டி இருந்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் பந்தினை பவுண்டரிக்கு அனுப்ப முடியும் என்று பொறுத்திரு ஆடினோம்.

Raina

அதன்படி இறுதிவரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றோம். ஆனால், மிடில் ஓவர்களில் நிறைய டாட் பால்கள் ஆடினோம். அந்த டாட் பால்களே இறுதியில் அழுத்தத்தை தந்து தோல்வியை கொடுத்தது என்று நினைக்கிறன். மற்றபடி எங்களது அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இந்த போட்டியில் இருந்து சில பாடங்களை கற்றுகொண்டுள்ளோம் என்று தோனி கூறினார்.

Advertisement