MS Dhoni : பூந்தமல்லியில் ஒரு தெருவிற்கு எம்.எஸ்.தோனி தெரு என்று பெயர் வாய்த்த சிறுவன் – விவரம் இதோ

இந்த ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தடைக்கு பிறகு சென்ற ஐ.பி.எ

Dhoni-Csk
- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தடைக்கு பிறகு சென்ற ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி மூத்த வீரர்களை வைத்துக்கொண்டு தொடரை கைப்பற்றி அனைவரையும் அசரவைத்தது.

CSKShop

- Advertisement -

இந்த வெற்றிக்கு காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனியின் சிறப்பான கேப்டன்சி என்றே பலரும் கூறிவருகின்றனர். அந்த அளவிற்கு சென்னை அணியை கட்டுக்கோப்பாக இன்றுவரை வழிநடத்தி வருகிறார். இதனால் சென்னை அணிக்கு உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர் இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு சிறுவன் அவனது தெருவிற்கு எம்.எஸ்.தோனி தெரு என்று பெயர் வைத்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள யஷ்வந்த் என்ற சிறுவன் தனது பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியின் கவுன்சிலர் உதவியோடு அந்த தெருவிற்கு எம்.எஸ்.தோனி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ அதனை இப்பொது சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ :

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களின் மகன்களுக்கு அந்த வீரர்களின் பெயரை வைப்பது வழக்கம். ஆனால், சென்னையில் தோனியின் மீது உள்ள அன்பினால் ஒரு தெருவிற்கே அவரது பெயர் வைக்கப்பட்ட இந்த சம்பவம் தற்போது இணையத்தில் படு ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement