இந்த வருஷ ஐ.பி.எல் தொடரில் இந்த அணி தான் பெஸ்ட். மத்த டீம்லா ரொம்ப கஷ்ட படறாங்க – தோனி ஓபன் டாக்

dhonidecision
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

ngidi

இந்நிலையில் அந்த போட்டி முடிந்து பேசிய தோனி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் அணி குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் தாங்கள் முதல் 6-7 போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் கடைசி நான்கு போட்டிகளாக சி.எஸ்.கே அணி சிறப்பாக விளையாடி உள்ளதாக தோனி கூறியுள்ளார்.

MI

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் நன்றாகவே விளையாடினார்கள் என்று குறிப்பிட்ட தோனி மும்பை அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் கூறியிருந்தார். மும்பை அணியை தவிர மற்ற அணிகள் கொஞ்சம் தடுமாறுவதாகவும் ஆனால் மும்பை அணி எந்த ஒரு சிரமமும் இன்றி விளையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement