இவர் பேட்டிங் ஆட ஆரம்பிச்சா பவுலர்கள் குழம்பி விடுவார்கள் – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த தல தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

cskvskxip

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..

17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

watson

இந்த போட்டியில் வாட்சன் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகியோரது பேட்டிங் ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. வாட்சன் மீது தோனி தோனி வைத்திருந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றும் விதத்தில் சிறப்பாக ஆடினார். அதேபோன்று பரிசளிப்பு விழாவின் போது டு பிளசிஸ் பற்றி சில விடயங்கள் தோனி பகிர்ந்துகொண்டார். அதில் அவர் டூபிளெஸ்ஸிஸ் குறித்து கூறியதாவது :

faf

எங்கள் அணியில் டு பிளேசிஸ் எப்பொழுதும் ஒரு ஆங்கர் (நங்கூரம்) ரோல் எடுத்து விளையாடுபவர். மேலும் அவர் லேப் ஷாட்டுகளை விளையாடும்போது பவுலர்களே குழம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு சிறப்பாக ஆடக்கூடிய வீரர் என்று அவரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது

Advertisement