இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று வகையான ஐ.சி.சி கோப்பையையும் வென்று கொடுத்த மகத்தான கேப்டனாக திகழ்ந்தவர். அதோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்ட தோனி, மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
இதன் காரணமாக அடுத்த ஜனவரி மாதம் வரை அவரால் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதனால் தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வருகிறார். ரசிகர்களின் அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் மேலும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று அறிவித்திருந்த தோனி தற்போது அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ஓய்வில் இருக்கும் வேளையில் அவர் குறித்த சில செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது அவரது பண்ணை வீட்டில் அவரது மூத்த சகோதரர் மற்றும் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த புகைப்படத்தில் தோனிக்கு இடதுபுறம் இருப்பவர் அவருடைய அண்ணன் நரேந்திர சிங் தோனி என்பவர் தான்.
தோனியை விட கிட்டதட்ட 10 ஆண்டுகள் பெரியவரான இவர் தோனியின் பயோபிக் படத்தில் கூட காட்டப்பட்டு இருக்க மாட்டார். ஏனெனில் சிறுவயதில் இருந்தே தோனிக்கும் அவருக்கும் இடையே பெரிய பிணைப்பு கிடையாது. அதனாலேயே அந்த படத்தில் அவரது காட்சிகள் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க : TNPL 2023 : முதல் வெற்றிக்கே திணறும் திருச்சி, சவாலன பிட்ச்சில் சுஜய் அசத்தல் – சிறிய இலக்கை கோவை போராடி எட்டியது எப்படி
மேலும் அவருக்கும் தோனிக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்ததாலும் அவர் தோனி அவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி தற்போது ஓய்வில் இருக்கும் வேளையில் பண்ணை வீட்டில் தனது அண்ணன் நரேந்திர சிங் தோனியுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனிக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.