தோல்விக்கு இதுதான் காரணம்..! தோல்வி குறித்து பேசிய தல தோனி..! விவரம் உள்ளே

csk-vs-daredevils
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 வது லீக் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்டலா மைதானத்தில் நேற்று (மே 18 ) நடைபெற்றது. இந்த போட்டியில் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி ஏற்கனவே பெற்ற சென்னை அணியும் , இந்த தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் தோற்றதிற்கான காரணத்தை சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

dhoni

நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டுஇங்கலி தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி தோற்றாலும், ஜெயித்தாலும் பரவ இல்லை என்று பயமின்றி ஆடியது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களும், விஜய் ஷங்கர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 36 ரன்களை எடுத்திருந்தனர். இதையடுத்து 20 ஓவர்கள் முடியில் 162 ரன்களை எடுத்திருந்தது.

- Advertisement -

இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு கூட்டணியில் , வாட்சன் சற்று தடுமாற்றனுடன் ஆடினார் இதனால் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ராயுடு மட்டும் நிலைத்து ஆடி அரை சதத்தை அடித்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 128 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

delhidaredevils

இந்த தோல்வி குறித்து பேசிய தோனி “இந்த பிட்சில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. அதுவும் இரண்டாம் பதியில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று எங்களுக்கு தெரியும், எங்கள் அணியில் மிடில் வருசையில் விளையாடும் வீரர்கள் சிறப்பான கூட்டணியை அமைக்க வேண்டும் அதனை அறிந்து நாங்கள் செயல்பட வேண்டும். புள்ளிபட்டியலை பார்ப்பது தவறான விடயம் ” என்று தெரிவித்துள்ளார்

Advertisement