2011 உ.கோ : கேரி கிறிஸ்டன் வேணும்னு சொல்லியும் தோனி தான் ரோஹித்தை கழற்றி விட்டாரு – முன்னாள் செலக்ட்ர் பேட்டி

Gary Kirsten
- Advertisement -

இந்தியாவில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலை குனியும் தோல்விக்கு முடிவு கட்டுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக 2011ஆம் நடைபெற்ற உலகக் கோப்பையில் கங்குலி உருவாக்கிய சீனியர் வீரர்களையும் தாம் வளர்த்த விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தோனி 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

Dhoni-Kohli-Rohit

- Advertisement -

இருப்பினும் அந்த அணியில் தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் முதல் 4 வருடங்களில் 57 இன்னிங்ஸில் வெறும் 1248 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்திருந்தார். அதன் காரணமாக மிடில் ஆடரில் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சரித்திரம் படைத்ததற்கும் உதவினார்கள்.

மறுத்த தோனி:
இந்நிலையில் அத்தொடரில் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் 15வது வீரராக ரோகித் சர்மாவை தேர்வு செய்யலாம் என்று ஆதரவு கொடுத்தும் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்று கருதிய கேப்டன் தோனி மறுப்பு தெரிவித்து பியூஸ் சாவ்லாவை தேர்வு செய்ததாக கிறிஸ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் 2011 உலக கோப்பையை தேர்வு செய்த தேர்வு குழுவில் இடம் பிடித்திருந்த உறுப்பினர் ராஜா வெங்கட் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அந்த உலகக் கோப்பை அணி தேர்வில் ரோஹித் சர்மாவும் திட்டத்தில் இருந்தார். அந்த சமயத்தில் நானும் யாஷ்பால் சர்மாவும் தென்னாபிரிக்காவில் இருந்தோம். ஏனெனில் இந்தியா அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தது. மேலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுரேந்தர பாவே, நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் சென்னையில் இருந்தனர். எனவே நாங்கள் தேர்வு செய்த அணியை தேர்வுக்குழுவினர் ஏற்றுக்கொண்டார்கள். அப்போது 15வது வீரராக ரோகித் சர்மாவின் பெயரை நாங்கள் பரிந்துரைத்தோம்”

- Advertisement -

“அதற்கு கேரி கிறிஸ்டனும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் கேப்டன் பியூஸ் சாவ்லா இருப்பதை விரும்பினார். அது சரியான முடிவாக இருக்கும் என இறுதியில் கேரி கிறிஸ்டனும் தெரிவித்த காரணத்தால் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. அது பற்றி ரோகித் சர்மாவிடம் தெரிவிப்பதற்கு அவரை சந்திக்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்தாலும் கேப்டன் ப்யூஸ் சாவ்லாவை விரும்புவதால் நாங்களும் ஏற்று கொண்டோம்”

Raja Venkat

“குறிப்பாக 14 வீரர்களை தேர்வு செய்த நாங்கள் கடைசி வீரரின் தேர்வை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களிடம் வழங்கினோம்” என்று கூறினார். அதன் காரணமாக ஏமாற்றத்தை சந்தித்த ரோகித் சர்மா சூரியன் நாளையும் உதிக்கும் என்று ட்விட்டரில் பதிவிட்டது இப்போதும் ரசிகர்கள் மறக்க முடியாததாக அமைந்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் திறமையை அறிந்திருந்த கேப்டன் தோனி 2011 உலகக்கோப்பைக்கு பின் சேவாக் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஷிகர் தவானுடன் புதிய தொடக்க வீரராக களமிறங்கும் மகத்தான முடிவை எடுத்தார்.

இதையும் படிங்க:PAK vs AFG : எங்க வந்து யார்கிட்ட? ஆப்கானிஸ்தானை செஞ்சிவிட்ட பாகிஸ்தான் – 37 வருட சரித்திர சாதனை வெற்றி

அதை பொன்னாக மாற்றிய ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றி நாளடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து நிலையான தொடக்க வீரராக உருவெடுத்தார். அதற்கிடையே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் தற்போது அவர் கடினமாக உழைத்து கேப்டனாக முன்னேறியுள்ளார். மேலும் 2011 அணியில் இடம் பெறாததால் உலகக் கோப்பையை இப்போது தான் முதல் முறையாக அருகில் பார்த்து தொடுவதாக சமீபத்தில் தெரிவித்திருந்த அவர் நிச்சயம் இம்முறை சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement