பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த தொடர் துவங்க உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனிடையே அணிகளும் தங்களது வீரர்கள் ஈடுபடும் பயிற்சியில் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ரிஷப் பண்ட், ரோகித் சர்மா என பல வீரர்கள் அதிரடியாக சிக்ஸர் விளாசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தோனி அடிக்கும் அபாரமான சிக்ஸர் ஒன்று பதிவாகியுள்ளது.
All you’ve got to do is watch this little video till the end and keep looping it. 🦁💛 #WhistlePodu #YelloveGame @msdhoni @mvj888 @russcsk pic.twitter.com/Yz5f1DQbOV
— Chennai Super Kings (@ChennaiIPL) September 10, 2020
அதில் சுழற்பந்து வீச்சாளர் எதிராக பேட்டிங் செய்யும் தோனி அந்த பந்தை தூக்கி விளாசுகிறார் சிக்சருக்கு சென்ற அந்த பந்து மைதானத்தின் எல்லைகளை தாண்டி மரங்களுக்கு நடுவில் சென்றுவிடுகிறது. பந்து எல்லைக் கோட்டில் தாண்டியதும் வீடியோ எடுக்கும் அந்த நபர் பந்து தொலைந்து விட்டது என சொல்லுகிறார்.
மேலும் அதே போன்று முரளி விஜய்யும் அந்த ஷாட்டை வியந்து பார்க்கிறார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தோனியின் என்ற முரட்டுத்தனமான சிக்ஸரால் மீண்டும் பழைய தோனி வந்து விட்டாரோ என்று ரசிகர்கள் அவரின்அதிரடியை காண இந்த தொடருக்காக ஆவலாக பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.