என்ன பண்ண சொன்னா தோனி என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு. எப்போதான் ஸ்டார்ட் பண்ணுவீங்க – ரசிகர்கள் கோபம்

Dhoni
- Advertisement -

2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்ற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெறியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

CSK

இதில் கேதர் ஜாதவ், முரளி விஜய், வாட்சன், சாவ்லா, மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகிய ஆறு வீரர்கள் வெறியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் சென்னை அணி கிட்டத்தட்ட 22 கோடி மீதம் வைத்திருக்கிறது. இந்நிலையில் 13வது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில், சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும் கடந்த சீசனில் தோனி சரியான பயிற்சி மேற்கொள்ளாததே அவரது மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்று பலர் கூறினர். கடந்த சீசனில் தோனி ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் மட்டும் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் ரசிகர்கள் தோனி அடுத்த சீசனில் தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

Dhoni-1

இந்நிலையில் 14வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் தோனி தனது பயிற்சியை தொடங்காமல் இருப்பது தோனியின் ரசிகர்கள், மூத்த வீரர்கள் என பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த சீசனில் எம்எஸ் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் கூட அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement