வீடியோ : தல தோனி சென்னை வந்ததும் தடபுடலாக மலர்தூவி வரவேற்ற ரசிகர்கள் சென்னை வந்தது எதற்கு தெரியுமா?

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

இந்த போட்டி இன்னும் ஒரு மாதத்திற்குள் துவங்க உள்ள வேளையில் தற்போது சிஎஸ்கே அணி தங்களது பயிற்சி துவங்கிவிட்டது. அதன்படி பயிற்சிக்காக நேற்று சென்னை வந்த மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் மலர் தூவி தடபுடலாக வரவேற்றனர். அதோடு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பொழுது அவருக்கு உற்சாக வரவேற்பும் கொடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்களின் வரவேற்பினால் உற்சாக மிகுதியில் தோனி அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். அங்கும் அவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தோனி மட்டுமின்றி ரஹானே, துஷார் பாண்டே, பிரசாந்த் சோலங்கி போன்ற வீரர்களும் தனி தனியாக நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

தோனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதை போலவே அவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று இம்மாத இறுதியில் துவங்க இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்காக தற்போது சென்னை அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வகையிலேயே நிர்வாகம் அவர்களை சென்னைக்கு அழைத்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS :ஒரே இன்னிங்சில் 8 இந்திய வீரர்களை வீழ்த்த இதுதான் காரணம் – ஆட்டநாயகன் நாதன் லயன் பேட்டி

இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தனது கடைசி தொடரில் விளையாட இருக்கும் தல தோனிக்கு சென்னை மைதானத்தில் பிரியாவிடை கொடுக்கவும் சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement