England : எங்களின் இந்த பிரமாதமான வெற்றிக்கு இவரே காரணம் – மோர்கன்

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமை

Morgan
- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

Eng

- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனபடி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது : எங்கள் அணி இன்று எல்லாவகையிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானத்தில் நாங்கள் போதுமான ரன்கள் அடித்தோம் என்றே நினைக்கிறன். ஆர்ச்சர் சிறப்பாக அதிவேகமாக பந்துவீசினார்.

Stokes

எண்களின் இந்த வெற்றிக்கு ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக அமைந்தார். அவரின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் போன்றே பிரமாதமான ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று மோர்கன் கூறினார்.

Advertisement